கங்கனா இல்லம் தரைமட்டமாக்கப்பட்ட விவகாரம்.. உத்தவ் தாக்கரே மீது நடிகை பாய்ச்சல்.!! - Seithipunal
Seithipunal


நடிகை கங்கனா ராணவத்திற்கும், மகாராஷ்டிரா ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கானது நிலவி வருகிறது. இந்த நிலையில், கங்கானாவின் பங்களா வீடு சட்டவிரோத கட்டுமானம் என்று கூறி, மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இதன்போது இமாச்சல பிரதேசத்தில் கங்கனா இருந்த நிலையில், மும்பை திரும்பியதும் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில், இது குறித்த வீடியோ காட்சியில், " மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறரீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. திரைப்பட மாபியாவுடன் சேர்ந்து எனது இல்லத்தினை இடித்து, என்னை பழிவாங்கிவிட்டீர்கள். 

உங்களின் ஆணவம் நாளையே நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கும் " என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகை கங்கனா சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு பின்னர், இந்தி திரையுலகில் நடக்கும் பல விஷயங்களை அப்பட்டமாக தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடு இடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kangana Ranaut angry with Maharashtra CM Uddhav Thackeray


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->