தேசிய கட்சியானது ஆம் ஆத்மி கட்சி! கம்னியூஸ்ட், திரிணாமுல் காங்கிரசின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியை (AAP) தேசிய கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டு மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. 

அரசியல் கட்சிகள் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற 4 மாநிலங்களில் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். அதேபோன்று 2 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று 6% வாக்கு வங்கியை பெற்றிருக்க வேண்டும் என்பது விதிகள்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீகித்தையும் பெற்றது. 

மொத்தமாக டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆம் ஆத்மீ கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அக்கட்சி தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை (AAP) தேசிய கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்திய கம்னியூஸ்ட் (CPI) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party recognized as national party


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->