காதலை ஏற்காததால் இளம்பெண்ணை மாடியில் இருந்து கீழே தள்ளிய வாலிபர்!
A young man pushed a young woman down from the terrace for rejecting his love
காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை அவரது நண்பன் மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் நேஹா (19), இவர் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்; அவரது தந்தையும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேஹாவும், தவுபிக் என்பவரும் சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
தவுபிக் நேஹாவிடம் காதலாக இருந்தாலும், நேஹா அவரை சகோதரராக தான் பார்த்துள்ளார். திருமணத்திற்கு வற்புறுத்திய தவுபிக்குக்கு நேஹா மறுப்புத் தெரிவித்ததால், அவர் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.சம்பவத்தன்று அதிகாலை, தவுபிக் பர்தா அணிந்து, அடையாளம் தெரியாமல் நேஹா வீட்டின் மாடிக்கு வந்தார். அங்கு துணி துவைத்து கொண்டிருந்த நேஹாவின் கழுத்தைப் பிடித்து நெரித்து, பின்னர் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த நேஹாவின் தந்தையையும் தாக்கி தப்பியோடினார். படுகாயமடைந்த நேஹாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தவுபிக் பின்னர் கைது செய்யப்பட்டார். பர்தா அணிந்து தப்பிச்செல்வதற்கான முயற்சி தோல்வியடைந்தது. அவர் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
A young man pushed a young woman down from the terrace for rejecting his love