இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் கால் மீது ஏறி இறங்கிய சக்கரம்
A truck collided with a twowheeler in kerala
கேரளாவில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் எலப்புள்ளி பாறை பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர் இருசக்கர வாகனத்தில் பாலக்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி கவிதா மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவிதாவின் காலில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்தில் படுகாயமடைந்த கவிதாவை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A truck collided with a twowheeler in kerala