இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் கால் மீது ஏறி இறங்கிய சக்கரம் - Seithipunal
Seithipunal


கேரளாவில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்துள்ளார்.

கேரளா மாநிலம் எலப்புள்ளி பாறை பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர் இருசக்கர வாகனத்தில் பாலக்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி கவிதா மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவிதாவின் காலில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்தில் படுகாயமடைந்த கவிதாவை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A truck collided with a twowheeler in kerala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->