காபியில் காத்திருந்த எமன்.! பிஞ்சுகளுக்கு ஏற்பட்ட விபரீதம்., பரலோகம் சென்ற தாய்.!
A mother mixing poison in coffee
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குர்நூல் என்ற கிராமத்தைச் சேர்ந்த வரலட்சுமிக்கு, திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், வரலட்சுமியின் கணவர் மற்றும் வரலட்சுமிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு சண்டைகள் ஏற்பட்டு உள்ளது. எனவே மிகவும் மன உளைச்சலில் வரலட்சுமி இருந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் மனமுடைந்த வரலட்சுமி குடிக்கும் காபியில் விஷத்தை கலந்து தானும் குடித்து விட்டு, தன்னுடைய நான்கு குழந்தைகளுக்கும் அதனை கொடுத்துள்ளார்.
தாய் கொடுத்த காபியை ஆசையோடு வாங்கிக் குடித்த அந்த நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளது. வரலட்சுமியும் விஷத்தின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி குழந்தைகள் மற்றும் வரலட்சுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வரலட்சுமி உயிரிழந்துள்ளார். அந்த நான்கு குழந்தைகளும் மிகவும் உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகின்றன. குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற தாயே தன்னுடைய குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A mother mixing poison in coffee