ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் எதிரொலி: ''பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு, மீண்டு வர நீண்ட நாட்களாகும்,'' அமித்ஷா அறிவிப்பு..!
A big setback for Pakistan it will take a long time to recover says Amit Shah
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், பெரும்பாலான மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு அவர் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அதில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பாகிஸ்தான் அத்துமீறலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் கடுமையான பதிலடி கொடுத்தனர். குறுகிய காலத்தில் எதிரிகளின் முகாம்களை சேதப்படுத்தியதுடன், அழித்ததும் குறிப்பிடத்தக்க சாதனை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எதிரிகளின் கண்காணிப்பு கட்டமைப்பை அழித்தது அவர்களுக்கு பெரிய பின்னடைவு என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதிலிருந்து, மீள்வதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, நமது எல்லை மற்றும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, அதன் 118 முகாம்களை அழித்து எல்லை பாதுகாப்பு படையினர் உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பதிலடியை கொடுத்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அவர்களின் கண்காணிப்பு கட்டமைப்பை தாக்கி அழித்தனர் என்றும், ஒவ்வொன்றையும் அமைக்க 04 முதல் 05 ஆண்டுகள் ஆகும் என்று அமித்ஷா அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
A big setback for Pakistan it will take a long time to recover says Amit Shah