உ.பி: தேர்வு எழுத அனுமதி மறுப்பு: 9ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.!
9th class girl commits suicide in uttar pradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பெரொலி மாவட்டத்தில் உள்ள பரடரி பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவருடைய 14 வயதுடைய மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பணம் நெருக்கடி காரணமாக மகளின் பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் அசோக்குமார் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.
இருப்பினும், பள்ளி கட்டணம் செலுத்தாததால் நேற்று நடைபெற்ற தேர்வை எழுதுவதற்கு மாணவிக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி, மாலை பள்ளியில் வந்தவுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
9th class girl commits suicide in uttar pradesh