லாரி, பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலி! 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேஷ் மாநிலம் பலமனேரு நகரில் இன்று மாலை அரசு பேருந்து சித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் பயணித்தனர்.

இந்நிலையில், பேருந்து நெடுஞ்சாலை மொகிலி காட் பகுதியில் சென்ற கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது . 

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்

இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலத்த காயமடைந்தவர்களை மீட்டு  உடனடியாக சித்தூர், பலமனேர், பங்காருபாலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து அந்த பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 people died in an accident where a lorry and a bus collided head on More than 40 people were seriously injured


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->