உத்திர பிரதேசத்தில் பேருந்தும்-லாரியும் மோதி கோர விபத்து.! 6 பேர் பலி, 15 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்தும், லாரியும் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

லக்னோவில் இருந்து பயணிகள் பேருந்து ருபைதீஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பஹ்ரைச்சில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இன்று அதிகாலை 4:30 மணியளவில் அதிவேகமாக பயணிகள் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாரி டிரைவர் அங்கிருந்து வாகனத்துடன் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 killed 15 injured in bus lorry collision in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->