கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. 59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் 59 வயதாகும் தனது தாய்க்கு மகள் 2ஆவது திருமணம் செய்து வைத்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதிமேனன் என்பவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் விசித்து வருகின்றனர்.

இதனால் 59 வயதாகும் ரதிமேனன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் மகள்களால் அடிக்கடி வந்து அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தங்கள் தாயின் தனிமையை மகள் இருவரும் உணர்ந்தனர்.

இதையடுத்து தாய்க்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்தனர். பின்னர் அவருக்கு ஏற்ப மணமகனை தேடி, அதேபகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்த திவாகரன் என்பவரிடம் தங்களது தாயை 2ஆவது திருமணம் செய்து கொள்ள முடியுமா என கேட்டுள்ளனர்.

இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல் ரதிமேனனும் திருமணத்திற்குச் சம்மதித்துள்ளார். இதையடுத்து இரண்டு வீட்டு உறவினர்கள் முன்னிலையில் திருச்சூர் திருவம்பாடி கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. 59 வயதாகும் தனது தாய்க்கு மகள்கள் 2வது திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

59-year-old mother's daughter married for the second time


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->