பஞ்சாப் : காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் படாலாவில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் படாலாவில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள சாஹல் கலன் என்ற பகுதி நோக்கி காரில் ஆறு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 13 வயது சிறுவன் காயம் அடைந்துள்ளான்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காயமடைந்த சிறுவன் படாலா சிவில் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் குர்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் குர்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 killed in car lorry accident in Punjab


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->