சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 49 ஆண்டுகள் சிறை.!
49 years jail penalty to youth for harassment in kerala
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பரியாரம் பகுதியை சேர்ந்தவர் முனீர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அன்று பதின்மூன்று வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். நாளடைவில் அந்த சிறுமியை மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கல்பெட்டா போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை முனீர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முனீரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கல்பெட்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதி கே.ஆர்.சுனில் குமார் விசாரணை செய்தபோது, சிறுமியை முனீர் பாலியல் பலாத்காரம் செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி அவருக்கு 49 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2.27 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
49 years jail penalty to youth for harassment in kerala