அசாம்-திரிபுரா எல்லையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கொஞ்சம் பறிமுதல்.! ஓட்டுநர் கைது.! - Seithipunal
Seithipunal


அசாம்-திரிபுரா எல்லையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அசாம்-திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் போதை பொருள் கடத்துவதாக அசாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் சுரைபரி சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில், லாரியின் உள்ளே ஒரு ரகசிய அறையில் இருந்த நான் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் குறித்து லாரி ஓட்டுனரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.30 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 lakhs worth cannabis seized in Assam Tripura border


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->