உ.பி : பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல் - 2 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் பர்கேரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பிந்த்-லிபுலேக் சாலையில், பிசல்பூர் தாலுகா நோக்கி நேற்று பிற்பகல் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் ப்ரீதம் ராஜ்புத் (28), அவரது மனைவி ஈஸ்வரி தேவி (25) மற்றும் இவர்களது மகள்கள் நந்தினி (5), ரூபி (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ராஜ்புத் தனது மனைவி மற்றும் மகள்களுடன் சுஸ்யாருக்குச் சென்றுவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கண்டெய்னர் லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 members of the same family including 2 girls killed in bike lorry accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->