மத்திய பிரதேசம் || பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து - 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் உள்ள ஒரு வீட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மொரேனா மாவட்ட ஆட்சியர் பாக்கி கார்த்திகேயன் தெரிவித்ததாவது, இந்த விபத்து வெடி மருந்தால் வெடித்ததா அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்

மேலும் இடிபாடுகளை அகற்ற இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் காவல்  கண்காணிப்பாளர் ராஜேஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed in explosion occurred a cache of firecrackers in madhyapradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->