மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!
33 percentage Reservation bill for women passed in Lok Sabha
மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற பொது தேர்தலில் மகளிர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியுள்ளது. வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதன்முதலாக தேவகவுடா தலைமையிலான அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்த போது மக்களவையில் தோல்வி அடைந்த நிலையில் இன்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
33 percentage Reservation bill for women passed in Lok Sabha