போர் பதற்றம்: ஈரானில் இருந்து டெல்லி வந்தடைந்த 310 இந்தியர்கள்; இதுவரை 827 பேர் மீட்பு..!
310 Indians arrive in Delhi from Iran 827 rescued so far
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 09 நாட்களாக போர் தீவிரமடைந்து வருகிறது. அங்கு உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுவரை இந்தியர்கள் 827 பேர் மீட்கப்பட்டு, டில்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இச்சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 21) மாலை ஈரானில் இருந்து விமானம் 310 இந்தியர்களுடன் புதுடில்லியில் தரையிறங்கியது.

இதன் மூலம், மொத்தம் 827 இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்ப்பாக ஈரானில் இருந்து இந்தியா திரும்பிய, தம்பதியினர் கூறுகையில், 'மத்திய அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். ஈரானில் இருந்து பத்திரமாக இந்தியா வந்தடைந்துள்ளோம். எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் தூதரக அதிகாரிகள் சிறப்பான முறையில் செய்து கொடுத்தனர். தங்குமிடம் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது'. என்று நன்றி தெரிவித்து கூறியுள்ளார்.
English Summary
310 Indians arrive in Delhi from Iran 827 rescued so far