கழிவு நீர் தொட்டியில் வீழ்ந்த சிறுவன் பரிதாப பலி.. காப்பாற்ற சென்ற தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் நுஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ். இவருக்கு திருமணமாகி ஆரிஜ் என்ற மகள் உள்ளார். அவரது மகன் 6 வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக அது தவறி விழுந்துள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு சிராஜூம் அவரது மூத்த சகோதரர் சலாம் சிறுவன் கழிவுநீர் தொட்டியில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவனை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு அழைத்தனர்.

ஆனால் அதற்குள் இந்த மூவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 persons death Due to drowns in to drainage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->