உத்தரபிரதேசம் || இயர்போனுடன் தண்டவாளத்தில் சென்ற மூவர் ரயில் மோதி பலி..! - Seithipunal
Seithipunal


இயர்போன் மாட்டிகொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பதோஹி ரயில் நிலையத்தின் அருகே இருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணையில் , கிருஷ்ணா, மோனு என்ற இருநண்பர்கள் ரயில் தண்டவாளத்தில் இயர்போன் மாட்டிகொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்குவந்த ரயில் அவர்கள் மீது எதிர்பாராமல் மோதியது. இதில், அவர்கள் இவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே போல , வாரணாசி - அலகாபாத் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த பங்கஜ் துபே என்ற நபர் இயர்போன் மாட்டிகொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 members death in hitting Train


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->