உத்தர பிரதேசம்: பைக் மீது லாரி மோதி விபத்து - 3 இளைஞர்கள் பலி
3 killed in bike lorry collision in uttar pradesh
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஜான்பூர் மாவட்டம் பத்லாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சரோகான்பூர் அருகே உள்ள அம்பேத்கர் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பைக்கில் வந்த மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குல்தீப் குமார், பூல்சந்த் கவுதம் மற்றும் பூல்சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பத்லாபூர் வட்ட அதிகாரி சுபம் டோடி தெரிவித்துள்ளார்.
English Summary
3 killed in bike lorry collision in uttar pradesh