உ.பி-யில் கோர விபத்து: 2 கார்கள் மோதியதில் 3 பேர் பலி, 7 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் அகந்த் நகர் காவல் நிலையப் பகுதிக்கு அருகே சுல்தான்பூர், பரா பாசு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அம்பேத்கர் நகர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்கும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக சுல்தான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீஷ் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed 7 injured in cars collision in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->