ஆந்திரா :: பெட்ரோல் பங்க் எண்ணெய் தொட்டியில் தவறி விழுந்த 3 பேர் பலி.!
3 die after slipping into petrol tank in Andhra
ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் பங்க் எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயச்சோட்டி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஷீர்கான் பெட்ரோல் பங்கில் நேற்று மாலை எண்ணெய் சேமிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மூன்று பேர் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு நபர் தவறி தொட்டியில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த மற்ற இருவரும் அதிர்ச்சி அடைந்து தொட்டியில் விழுந்த நபரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் இவர்களும் உள்ளே விழுந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரையும் தொட்டியில் இருந்து மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 die after slipping into petrol tank in Andhra