ராஜஸ்தான் || பேருந்தின் மீது மின்கம்பி உரசியதில் இருவர் பலி... 6 பேர் படுகாயம்..!
2 Members Death In Rajastan
பேருந்து மீது மின்கம்பி உரசியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மீர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கோயில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஜெய் சர்வீஸ் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது தாழ்வான மின் கம்பி ஒன்று அந்த பேருந்தின் மீது உரசியது.
இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது இதில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
2 Members Death In Rajastan