சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


கும்மிடிப்பூண்டி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நுக்கனா பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அருண் (32) என்பவருடன் ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆந்திர மாநில போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் விபத்து நடந்த பகுதி ஆந்திராவை சேர்ந்தது என்று உறுதிப்படுத்தி 5 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in motorcycle collision in Andhra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->