உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவி ஏற்க உள்ளனர். அதன்படி கௌகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க உள்ளனர்.

நீதிபதிகள் இருவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி தமன்னா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

நீதிபதி தூலியா மற்றும் பர்திவாலா ஆகியோரின் நியமனம் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்ற பிறகு 32 ஆக குறைந்திருந்த நிலையில், இன்று மேலும் 2 பேர் பதவி ஏற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 judges of the Supreme Court take office today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->