துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.2.60 கோடி மதிப்பிலான வைரம் பறிமுதல்.! 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


மங்களூரில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூபாய் 2.60 கோடி மதிப்பிலான வைரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்வதற்கு வந்திருந்த இரண்டு வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இவர்கள் இரண்டு பேரும் ஷூக்குள் மறைத்து வைத்து மாத்திரை வடிவில் வைரத்தை துபாய்க்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இரண்டு பேரும் தட்சிண கன்னடா மாவட்டம் பட்கல் பகுடி பகுதியை சேர்ந்த அனாஸ் மற்றும் அமர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூபாய் 2.60 கோடி மதிப்பிலான வைரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் இரண்டு பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்த மங்களூர் விமான நிலைய போலீசார், இந்த கடத்தல் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 crore 60 lakhs worth diamond seized in Mangalore airport


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->