15 வயது சிறுமி தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


சிக்கமகளூரு மாவட்டத்தில் 15 வயது சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் அட்டகத்தே பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் சுஷ்மிதா(15) அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாத சுஷ்மிதா மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். மேலும் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து சுஷ்மிதா நேற்று முன்தினம் வீட்டு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 year old girl commits suicide in chikkamakaluru Karnataka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->