டிஜிட்டல் மோசடி - ஒரே வாரத்தில் 14 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வரும் மோசடி விளம்பரம் மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தமிழக காவல் துறையின் மாநில சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். 

இதேபோல், மும்பை போலீஸ் என்று கூறி ரூ.2,725 கோடி மோசடி செய்து விட்டதாக வேலூரை சேர்ந்தவரை மிரட்டி, டிஜிட்டல் கைது செய்து பணம் பறித்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 peoples arrested for digital fraud


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->