அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலி.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போய்குடாவில் உள்ள பழைய பொருட்கள் இருக்கும் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் ஷார்ட் சர்க்கியூட்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நுனியில் இருந்த தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த விபத்து அவர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 people were burnt to death in the fire accident in Hyderabad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->