நலம் தரும் முத்திரை., உடலை சுறுசுறுப்பாக்க இந்த முத்திரை செய்யலாம்..! - Seithipunal
Seithipunal


ஆரோக்கியத்திற்கு யோகா செய்வது நல்லது. ஆனால் சிலருக்கு யோகா செய்ய போதிய நேரமிருக்காது அவர்கள் முத்திரைகள் செய்து வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் அளிக்கும்.

ஆதி முத்திரை செய்து வந்தால்  நமது உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும் . ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும். இந்த முத்திரையை எப்படி செய்வது என பார்போம்.

விரிப்பில் கிழக்கு திசை நோக்கி சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் இருபது விநாடிகள்.

பின் கட்டை விரலை மடக்கி உள்ளங்கை நடுவில் வைத்து மற்ற நான்கு விரல்களை மூடவும். படத்தை பார்க்கவும். எல்லா விரல்களிலும் சிறிய அழுத்தம் கொடுக்கவும். 

முத்திரை செய்யும் போது மூச்சு பயிற்சி செய்யவும். பின்னர் சாதாரண  மூச்சில் இருக்கவும். இந்த முத்திரையை 15 நிமிடங்கள் வரை செய்யலாம். இந்த முத்திரையை  செய்து வந்தால் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Adi Mudra helps to keep the body active


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->