தெய்வீக மூலிகை ''மருதாணி''யின் மகத்தான பயன்கள்!
Maruthani Benefits in tamil
தெய்வீக மூலிகைகளில் ஒன்றாக மருதாணி உள்ளது. ஒரு பெண்ணிற்கு அமையும் கணவரின் குணாதிசயங்களை கண்டறிய முன்னோர்கள் மருதாணியை பயன்படுத்துவார்கள். திருமணமாக போகும் இளம் பெண்ணிற்கு மருதாணி வைத்து அது எப்படி சிவக்கிறது என்பதன் மூலம் கண்டறியப்படுகிறது.
ஒரு பெண்ணின் கையில் மருதாணி விரைவில் சிவந்துவிட்டால் அவரது கணவர் அவர் மேல் அதிக அன்புடன் இருப்பார் எனவும் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர் பெருமைப்படுவார்கள்.

இதனால் கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி இடும் பழக்கம் ஏற்பட்டது. மருதாணி சரியான நேரத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை சரியாக பிறக்கும் எனவும் கருதப்படும். ஒரு சிலருக்கு ஆரஞ்சு நிறத்துடனும் ஒரு சிலருக்கு அடர் சிவப்பு கருஞ்சிவப்பு நிறத்தில் சிவக்கும்.
மருதாணி சிவக்காமல் இருந்தால் சீதள உடம்பை குறிக்கும். அதிகம் கருத்து விட்டால் அது பித்த உடம்பு எனப்படும். இரண்டு நிலையிலும் கருத்தரிப்பது என்பது தாமதமாகும் என்பது முன்னோர்களின் கருத்து.
மருதாணி துளசியை போல தெய்வீக மூலிகை. மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்டது. சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதாணி மரங்கள் நிறைந்து அசோக வனம் இருந்தது.

மருதாணி வைப்பதன் மூலம் உடம்பு சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்துகிறது. மருதாணி வைப்பதன் மூலம் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் அழிகிறது. நகங்களுக்கு எந்த ஒரு நோயும் வராமல் இருக்கும். மருதாணியின் பூக்களை தலையணையில் பரப்பி அதன் மேல் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, இரும்பல் குணமடையும். மருதாணி இலையை நன்றாக அரைத்து அதனை சிறு சிறு அடைகளாக தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து உபயோகித்தால் அடர்த்தியான தலைமுடி வளரும்.
உடம்பில் உள்ள உஷ்ணம் குறையும். மருதாணி பூக்களை அரைத்து சாறு பிழிந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேகநோய் பரவாமல் தடுக்கும். மருதாணியை அரைத்து பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வர பெரும்பாடு, வெள்ளைப்பாடு குணமடையும்.
English Summary
Maruthani Benefits in tamil