பிரியாணி இலையை தீயிட்டு கொளுத்தி சுவாசித்தால் ஏற்படும் நன்மைகள்...!! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் உபயோகிக்கும் சமையல் முறையில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் உள்ள சிறு சிறு பொருட்களில் இருந்து அரிசி முதல் அனைத்திலும் உள்ள சத்துக்களை அறிந்து நமது முன்னோர்கள் சாப்பாட்டில் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்து சென்றனர். 

இந்த செய்தி குறித்த வீடியோ பதிவு: 

அந்த வகையில் நாம் பிரியாணியை சாப்பிடும் சமயத்தில்., பிரியாணி இலையை கண்டிருப்போம். இந்த பிரியாணி இலையை பிரியாணி செய்யும்போது போடுவார்கள்., இது பெரும்பாலும் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவதாக அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம்., ஆனால் இந்த இலையால் நமது சரும பிரச்சனைகளுக்கும் சுவாசப் பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படுகிறது. 

இந்த தகவலானது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்.,  அதற்கான செய்யும் முறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இனி காண்போம். பிரியாணி இலையை எடுத்துக் கொண்டு வீட்டில் பாத்திரத்தில் போட்டு சுமார் 10 நிமிடம் நன்றாக எரித்த பின்னர் அந்த அறையிலேயே பத்து நிமிடம் இருந்து., அதன் நறுமணத்தை சுவாசிக்கவேண்டும். 

பிரியாணி இலை, BIRIYANI LEAF,

பிரியாணியில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக அதில் உள்ள நறுமணம் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைத்து., மனதிற்கு தேவையான அமைதியை தருகிறது. பிரியாணி இலையின் நறுமணத்தின் மூலமாக துர்நாற்றத்தை வெளியேற்றி வீட்டையும் நல்ல மனத்துடன் பாதுகாக்கிறது. 

இதன் மூலமாக நேர்மறை ஆற்றல் பெற்று வீடு முழுவதும் நன்மை உருவாகிறது., பிரியாணியில் இருக்கும் புரதச் சத்து., வைட்டமின் ஏ., வைட்டமின் சி., பொட்டாசியம்., சோடியம்., ஜிங்க் சத்து மற்றும் இரும்பு சத்து போன்றவை உள்ளது. இதன் மூலமாக நமது உடல் தெளிவு பெற்று இளமையாக இருக்கிறது. இரத்த ஓட்டமானது சீர்படுகிறது. சருமத்திற்கு தேவையான புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

பிரியாணி இலை, BIRIYANI LEAF,

பிரியாணி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களது முகமானது இளமையாக இருக்கிறது., பிரியாணி இலையை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விலக்கம் ஏற்படுகிறது., பிரியாணி இலையை தேநீர் போன்று வைத்து குடித்து வந்தால் முடி உதிர்வை உடனடியாக நிறுத்தவும் வழிவகை செய்யும். 

தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பிரியாணி இலையின் நீரை சருமத்தில் எரிச்சல் உள்ளவர்கள் எரிச்சல் இருக்கும் இடத்தில் தேய்த்தால் எரிச்சலானது குணமாகும். இது மட்டுமல்லாது பாம்பு கடித்தாலும் பிரியாணி இலை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது., பிரியாணி இலையில் இருக்கும் மருத்துவத்தின் மூலமாக விஷத்தை முறிக்கும் தன்மையும்., கிருமிகள் இருக்கும் பட்சத்தில் அதனையும் அழித்துவிடும் தன்மை கொண்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

subscribe - Seithipunal Youtube 
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HOW TO IMPROVE USING PIRIYANI LEAF


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->