உங்கள் வாய் ஆரோக்கியத்தற்காக தேங்காய் எண்ணெய் ஆயில் புல்லிங்க் செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


தினமும் ஆயில் புல்லிங்க் செய்து வருவது நமது  சுவாசம், உணவுக்குழல் பகுதியில் தோன்றும் தொற்றுக்களை குறைக்க உதவும். குறிப்பாக தேங்காய் எண்ணெயில் உள்ள ஒரு இயற்கை மூலப்பொருள், இது செரிமானத்தை மேம்படுத்துவதிலிருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் உதவுகிறது. இதனால் தேங்காய் என்ணெயில் ஆயில் புல்லிங்க் செய்வது எப்படி என பார்போம்.

முதலில் 2-3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் வாயில் வைக்கவும். இப்போது மெதுவாக வாய் முழுவதும் படும்படியாக கொப்புளிக்க தொடங்குங்கள். இப்படி செய்யும் நேரத்தில் நீங்கள் எண்ணெய்யை முழுங்காமல் கவனமாக இருங்க வேண்டும். சில நிமிடங்கள் செய்து முடித்ததும், எண்ணெய்யை துப்பி விடவும். பின்னர் தண்ணீரில் கொண்டு கொப்பளித்து விடவும்.

தேங்காய் எண்ணெய் ஆயில் புல்லிங்கால் கிடைக்கும் நன்மைகள் :

வாயில் புண்கள் ஏற்பட்டால் அதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். வாயில் புண்களைக் குணப்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன.

வாயை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வாயில் வீக்கத்தைக் குறைக்கும்.

தேங்காய் எண்ணெயில் புல்லிங்க் செய்வதால் தொண்டையில் உள்ள பாக்டீரியாவையும் அழிக்க முடியும். இதனால் தொண்டை அரிப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coconut Oil gargle benifits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->