சவுக்கு சங்கருக்கு கடலூர் சிறையில் நடந்தது என்ன? விடீயோ எடுக்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்!  - Seithipunal
Seithipunal


லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புபிரிவு துறை, சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கிய விவகாரத்தில், புதிய தகவல் கிடைத்துள்ளது. பணி நீக்க ஆணையை சவுக்கு சங்கர் பெற மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

அரசியல் விமர்சகர் என்ற பெயரில் ஊடகங்களில் செயல்பட்டு வந்த சவுக்கு சங்கர் என்பவர், தனது சமூக வலைதள பக்கத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார். அத்துடன் நீதித்துறை ஊழலில் சிக்கியுள்ளதாக பேசினார். இது குறித்த அவதூறு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து தொடர்ந்து விசாரித்தது. 

அவதூறு வழக்கு தொடர்பாக, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அப்போது, ஊடகங்களில் இதுபோன்று பதிவுகளை செய்ய மாட்டேன் என உறுதி அளிக்க நீதிபதி கேட்டுள்ளார். ஆனால் சவுக்கு சங்கர் அப்படி என்னால் கூற முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது , சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர்.  இந்த நிலையில் சிறைத்தண்டனை பெற்றதால், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை நிரந்தரமாக சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் கடலூர் சிறையில் என்ன நடந்தது என, சவுக்கு சங்கரே அவருடைய வழக்கறிஞர் நண்பரிடம் தெரிவித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. "இன்று காலை (சனிக்கிழமை செப் 24 )  லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புபிரிவு துறை அலுவலர்கள் கடலூர் சிறைக்கு வந்து  ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கினர். ஷோ காஸ் நோட்டிஸ் என்பது ஒருவரை வேலையிலிருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு முன் வழங்கும் நோட்டீஸ். ஆனால் அந்த நோட்டீசை வாங்க மறுக்கவே, அதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தி அங்கே ஒரு மொபைல் போன் வைத்து வீடியோவும் எடுத்தனர். ஆனால் இறுதிவரை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வாங்கவும் மாட்டேன் கையெழுத்து போடவும் மாட்டேன் என உறுதியாக மறுத்திருக்கிறார்" என்கிறது அந்த தகவல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what happened to savukku shankar in Cudddalore jail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->