கனமழை காரணமாக தமிழகத்தில் இந்த 4 மாவட்டத்தில் மட்டும் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
today 4 districts school and college leave
தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது.
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, டி நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், எதிர்பாராமல் திடீரென பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
today 4 districts school and college leave