தாமதமாகும் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 2 தேர்வுகள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.ஸி) -யால் 5,446 பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 55,041 தேர்வர்கள் எழுதினர். இந்தத் தேர்வுகள் நடந்து பத்து மாதங்கள் கடந்தும் இதுவரை முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகவில்லை.

இது குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது டிசம்பர் முதல் வாரமும் முடிவடைந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc group 2 result delay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->