டிஎன்பிஎஸ்சி குரூப்–2 முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுத் துறைகளில் மொத்தம் 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இதில்,குரூப்–2 பதவிகள்: உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை–2, தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர் உள்ளிட்ட 50 இடங்கள்

 குரூப்–2A (Non-Interview) பதவிகள்: முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் நிலை–3, மேற்பார்வையாளர், செயல் அலுவலர் நிலை–3, கீழ்நிலை செயலிட எழுத்தர் உள்ளிட்ட 595 இடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்காக மொத்தம் 5,53,634 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் ஆண்கள் – 2,12,195 பேர்பெண்கள் – 3,41,114 பேர்
திருநங்கைகள் – 25 பேர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சென்னை மட்டும் 188 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது; இதில் 53,065 பேர் எழுதவுள்ளனர்.

 தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்தைச் சென்றடைய வேண்டும். 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வறைக்குள் நுழைய அனுமதி இல்லை என டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தகுதி பெறுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group 2 preliminary exam will be held tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->