மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயது

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு பதவிக்காலத்துடன் கூடுதலாக 3 வருடம் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவு அல்லது அதற்கு நிகரான தொழிற்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.30,845 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:- விண்ணப்பதாரர்கள் NCVT / ஐடிஐ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதன்பின் தகுதி பெற்றவர்கள் தொழிற்பிரிவு தேர்வு அல்லது திறன் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இறுதி தேர்வில் ஐடிஐ மதிப்பெண்கள் 80%, திறன் தேர்வு மதிப்பெண்கள் 20%
என கணக்கிடப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். பட்டியலில் இடம் பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:- விருப்பமுள்ளவர்கள் https://www.aweil.in/notice என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி, அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் சேர்த்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager,
Ordnance Factory Tiruchirappalli,
Tamil Nadu -620016.

கடைசி தேதி: செப்டம்பர் 21.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in trichy Ordnance company


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->