மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு: 1340 காலிப்பணியிடங்கள் - SSC JE 2025 அறிவிப்பு வெளியீடு!
Central Government Sector Employment 1340 Vacancies SSC JE 2025 Notification Released
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தனது Junior Engineer (JE) 2025 தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் 30 அன்று வெளியிட்டுள்ளது. இது, பொறியியல் துறையில் அரசுப் பணியை நாடும் இளைஞர்களுக்கான மிக முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
2025 ஆண்டில் மொத்தம் 1,340 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், ஜூலை 21, 2025 வரை ssc.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூலை 22 ஆகும்.
தேர்வு விவரங்கள்
SSC JE 2025 தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தாள் 1:
-
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு – 50 கேள்விகள் (50 மதிப்பெண்கள்)
-
பொது அறிவு – 50 கேள்விகள் (50 மதிப்பெண்கள்)
-
தொழில்நுட்பப் பிரிவு (சிவில்/மின்/மெக்கானிக்கல்) – 100 கேள்விகள் (100 மதிப்பெண்கள்)
-
மொத்தம்: 200 கேள்விகள், 200 மதிப்பெண்கள்
-
நேரம்: 2 மணி நேரம்
-
தவறான பதில்களுக்கு: ஒவ்வொன்றுக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்
தாள் 1 தேர்வு தேதி: அக்டோபர் 27 முதல் 31 வரை
தாள் 2:
-
தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவில் – 100 கேள்விகள் (300 மதிப்பெண்கள்)
-
நேரம்: 2 மணி நேரம்
-
தவறான பதில்களுக்கு: ஒவ்வொன்றுக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும்
-
தேர்வு தேதி: 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
கட்டண விவரம்
விண்ணப்ப திருத்த சாளரம்: ஆகஸ்ட் 1 மற்றும் 2
அரசு வேலை கனவுக்கு நெருங்கும் வழி!
SSC JE தேர்வு வழியாக, மத்திய அரசு துறைகளில் நிரந்தர பொறியாளர் பணியைப் பெற முடியும். இதற்கான வாய்ப்பு தற்போது திறந்துள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தயார் செய்யும் பணியைத் தொடங்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
🔗 https://ssc.gov.in
English Summary
Central Government Sector Employment 1340 Vacancies SSC JE 2025 Notification Released