வட்டார கல்வி அலுவலர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பம் ஆரம்பம்.!! - Seithipunal
Seithipunal


வட்டார கல்வி அலுவலர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பம் ஆரம்பம்.!!

நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் தொடக்க கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிபணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் ஆரம்பமாகி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ளது. 

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது முழுமையாக பூர்த்தி செய்யபடாமல் உள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவை http://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

அப்படி விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.சிஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். 

இந்தத் தேர்வை பொறுத்தவரையில் தமிழில் தகுதி தேர்வாக 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வாக 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. இதில் தமிழ் தகுதித் தாள் தேர்வில் 20 மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவரங்களை தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

application for district education officer posting from today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->