பாம்பு தான் பால்,முட்டை குடிக்காதே பின் ஏன் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள் தெரியுமா? : அதனுள் அறிவை ஒழித்து வைத்த தமிழன்!! - Seithipunal
Seithipunal


பாம்புக்கு பால் ஊற்றுவதன், முட்டை வைப்பதன் காரணம் என்ன?.. ஆனால் உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவெனில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது என்பது தான். பின் எதற்காக பாம்பு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள் தான். காரணம் என்னவென்றால் அப்போதைய கால கட்டத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் மனித நடமாட்டம் மிக மிக குறைவு. 

மேலும் மனிதனை விட பாம்புகள் தான் அதிகம் காணப்பட்டது. ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. 

அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். எனவே பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். ஏனெனில் பெண் பாம்பு தனது உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து தான் ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பிலிருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. இதனால் பாம்புகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணத்தை சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே தான் அவ்வாறு பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the reason for putting the egg into the snake pit?


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->