சென்சஸ் பெயரில் வீடு புகுந்த இளம்பெண்... கத்தியுடன் தாக்குதல்...! - துணிச்சலால் தப்பிய 55 வயது பெண்..!
young woman entered house name census attacked knife 55 year old woman survived courage
புட்லூர் ஏவிஎம் நகர் பகுதியில் வசிக்கும் சியாமளா (55) என்பவரின் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளது. அவரது கணவர் ராமு ஓட்டுநராக வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், தனியாக இருந்த சியாமளாவை குறிவைத்து மர்ம இளம்பெண் ஒருவர் “சென்சஸ் கணக்கெடுப்பு” என்ற பெயரில் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இதன் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த அந்த பெண், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சியாமளாவை மிரட்டியதுடன் தாக்க முயன்றுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க கத்தியை காட்டி அச்சுறுத்தியதால் வீடு முழுவதும் பதட்டம் நிலவியது.
ஆனால் அதிரடியான துணிச்சலுடன் செயல்பட்ட சியாமளா, உடனே வீட்டை விட்டு வெளியேறி கதவை வெளியில் இருந்து பூட்டி உதவி கேட்டு கத்தினார். அவரது சத்தம் கேட்ட அயல்வாசிகள் உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையம் காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த காவலருக்கு அந்த இளம்பெண்ணை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டவர் புட்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பதும், கடன் சுமையால் திணறியதால் இவ்வாறு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த தாக்குதலில் காயமடைந்த சியாமளா தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம், “சென்சஸ்” என்ற பெயரில் வீட்டுக்குள் நுழையும் மர்ம நபர்களை எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது.
English Summary
young woman entered house name census attacked knife 55 year old woman survived courage