துணிவு, வாரிசு திரைப்படம் கொண்டாட்டம்.. விஜய், அஜித் ரசிகர்கள் மீது 10 வழக்குகள் பதிவு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிதுள்ள திரைப்படம் 'வாரிசு'. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

அதேபோல் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் வெளியானதை அடுத்து, விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானதனால் ரசிகர்கள் இரவு முதல் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி அண்ணாசாலை, மறைமலையடிகள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளனர்.

 

இதனையடுத்து அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக ஒதியன்சாலை காவல் நிலையத்தில் 2 வழக்குகள், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகள், காலாப்பட்டு காவல் நிலையத்தில் 5 வழக்குகள் என மொத்தம் 10 வழக்குகள் ரசிகர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay and Ajith fans 10 case filled in Pudhuchery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->