இனி படங்களில் நடிக்கமாட்டாரா.? வடிவேலுவின் உருக்கமான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பினில், இயக்குனர் சிம்பு தேவனுக்கும், வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டு படம் நின்று போனது. இதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக பட அதிபர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.  பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும் அந்த படத்தில் மீண்டும் நடிக்க மாட்டேன் என வடிவேல் உறுதியாக மறுத்தார். 

இதன் காரணமாக புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய அவர்கள் தடை விதித்தனர். வடிவேலு அதன் பின்னர் 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தான் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக வடிவேலு அறிவித்துள்ளார்.  

vadivelu, seithipunal

இதுகுறித்து அவர், "நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைப்பதால் ஒவ்வொரு நாளும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கின்றேன். என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான். அது இல்லை என்றால் இந்த வடிவேலு கிடையாது. ஏன் நீங்கள் இன்னும் நடிக்காமல் இருக்கின்றீர்கள் என என்னை பார்த்து கேள்வி எழுப்பலாம்.

நான் விரைவில் புதிய படத்தில் நடிக்க போகின்றேன். இந்த மாதம் முடிவதற்குள் கல்லத்தில் இறங்குவேன். வாழ்க்கை என்றால் சைத்தான், சகுனி என இருக்கும் தான். எல்லோருடைய வாழ்விலும் அது இருக்கின்றது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா.? எனக்கு மக்கள் சக்தி இருக்கும் வரை அனைத்தையும் எளிதாக கடப்பேன். நான் மீண்டும் நடிப்பேன்" என அவர் கூறி உள்ளார்.

இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu new announcement about cinema


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->