அப்பனின் மகனிடம் வேண்டுகோளை வைத்துவிட்டேன்.. அடுக்கு மொழியில் டி.ராஜேந்தர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தற்போது துவங்கியது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்திரன் அணிக்கும் - முரளி அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் தேர்தல் முடிவுகள், இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், " நான் வந்தே தீர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தினார். எனக்கு எண் கணிதத்தின் மீதும், என் கணிதத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது. நவகிரகங்களை போல, எங்களது அணியிலும் நவகிரகங்கள் உள்ளது. நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். 

பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் கொடுத்தால், அங்கு ஸ்டுடியோ கட்டி வைத்துள்ளனர். நான் இறைவனை நம்புகிறேன். என் அப்பன் சிவபெருமான் மகன் முருகனிடத்தில் வெற்றிக்காக நேற்றே அவனை பார்த்து வந்துவிட்டேன். வெற்றிவாகை எங்களுக்கே " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

T Rajendran Pressmeet 21 November 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->