சமூக வலைதளத்தில் இருந்து விலகும் ரத்னகுமார்: இதுதான் காரணம்? - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். 

இதனை தொடர்ந்து இவர், அமலாபால் நடிப்பில் இயக்கிய 'ஆடை' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

ரத்னகுமார் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருந்தார். 

அதுபோல் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படத்திற்கும் ரத்னகுமார் இணை எழுத்தாளராக இருந்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. 

'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ரத்னகுமார் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, ''எழுதுவதற்காக ஆஃப்லைன் செல்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ratnakumar quits social media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->