#BREAKING || திடீர் திருப்பம் - வசமாக சிக்கினான் நடிகன் சித்தார்த்., வழக்கை பதிவு செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் மாநில பயணத்தின் போது, அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து, தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில், "அராஜகவாதிகளின் சம்பந்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது" என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட இந்த பதிவை ரீடுவிட் செய்த நடிகன் சித்தார்த், ஆபாசமான வார்த்தையை குறிக்கும் விதமாகவும், இரட்டை அர்த்தத்தில் தேசிய வீராங்கனை என்று கூட பார்க்காமல் அசிங்கப் படுத்தும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டு இருந்தான். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகன் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. மேலும் அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட் முடக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தான் செய்த செயல் அவன் தரப்பில் அது நியாயமது என்றும், அதை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்து இருந்தான் சித்தார்த்.

இந்நிலையில், நடிகன் சித்தார்த் மீது ஹைதராபாத் சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவன் மீது, section 67 of IT Act, Section 509 of IPC கீழ்., ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Casi File Against Actor Siddharth


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->