விஜய் - சங்கீதா விவகாரத்தில் அடுத்த திருப்பம்! 'பிள்ளைகளுக்கான உரிமையை வழங்க வேண்டும்'...! - நீதிமன்றத்தில் முறையீடு - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்சநட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரியக் கோரி, அவரது மனைவி சங்கீதா கடந்த மாதம் 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அந்த மனுவில் விஜய் மீது அவர் அடுக்கடுக்கான அதிரடிப் புகார்களைப் பட்டியலிட்டிருந்தது கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தற்போது சங்கீதா அதே நீதிமன்றத்தில் மற்றுமொரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், திரையுலகில் கோடிக்கணக்கில் ஊதியம் ஈட்டும் விஜய், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் முறையான மற்றும் நியாயமான வாழ்வாதாரப் பங்கை (ஜீவனாம்சம்) வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை விஜய் முறையாகத் தர வேண்டும் என்றும், சுமூகமான முறையில் பரஸ்பரம் பிரிந்து செல்லத் தான் பலமுறை முயன்றும் விஜய் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் அந்த மனுவில் சங்கீதா பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next twist Vijay Sangeeta affair Children rights should be given Appeal court


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->