ரஜினியால் மிகுந்த துயரத்தில் கே.எஸ்.ரவிக்குமார்.! கமல், குஷ்பூ குறித்து உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


மித்ரன் ஜவகர் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் படம் தான் மதில். இந்த படம் OTT தளத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த படம் குறித்து நடிகரும், இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் பேசினார். 

அப்போது, ''மனசாட்சி சொன்னபடி மிகவும் தைரியமாக எதிரிகளை சந்திக்கின்ற ஒரு அப்பாவின் உரிமை குரல் தான் 'மதில்' படம். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனை யாருமே தடுக்க இயலாது. 

இதன் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று கூறினர். மேலும், நடிகர்களின் அரசியல் குறித்து தெரிவிக்கையில், கமல், குஷ்பு ஆகியோர் எனது நண்பர்கள். எனவே, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற விரும்புகின்றேன். 

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது வருத்தமாக இருக்கின்றது. ஆயினும், அவருடைய ஆரோக்கியம் தான் மிக முக்கியம். மீண்டும் ரஜினி, கமலை வைத்து படம் இயக்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான கதையும் என்னிடம் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ks ravikkumar speech about rajini


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->