கார்த்திக் சுப்பராஜ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
Karthik Subbaraj film captured famous company
ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஜிகர்தண்டா-2'.

இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய அறிவிப்பை பட குழு வெளியிட்டுள்ளது. அதில், 'ஜிகர்தண்டா-2' படத்தின் தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Karthik Subbaraj film captured famous company